Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

இயற்கைத்தாயின் எல்லை!

தலைவா - Leader
Photo Credit To நன்றி:பி.ஜோதி இராமலிங்கம் மற்றும் தி ஹிந்து

Story Highlights

  • முதல்வரென்றாலே மக்களுக்காகத்தான்!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

 

 

மனிதம் மறையவில்லை!

 

மக்கள் மாண்பு இன்னமும் இருக்கிறது!!

 

இயற்கைத்தாயின் எல்லை!

படம்: சைதாபேட்டை அடையாறு பாலம் |நன்றி:பி.ஜோதி இராமலிங்கம் மற்றும் தி ஹிந்து
படம்: சைதாபேட்டை அடையாறு பாலம் |நன்றி:பி.ஜோதி இராமலிங்கம் மற்றும் தி ஹிந்து

 

இந்தியா சுதந்திரமடைந்த 68 ஆண்டுகளில் மிகப்பெரும் மழைப்பொழிவு! இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் காணும் மிகப்பெரும் மழைப்பொழிவு! 50 ஆண்டுகளில் நிர்வாகம் செய்த கைதேர்ந்த, ராஜதந்திர, சாணக்கிய அரசியல் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தாய்மை – இயற்கை!

தமிழகத்தின் விடிவெள்ளிகள், தலைவர்கள், தலைவிகள் மற்றும் அவரது நிர்வாகத்திறனுக்குச் சான்றே நம் இயற்கையன்னையின் இப்பாடம். மக்கள் முதல்வர்கள், விடியல் தலைவர்கள்,  ‘இன்ன பிற தலைவா ‘ க்களுக்கும் இயற்கையன்னையின் சாட்டையடியே இது! அவர்கள் நிர்வாகம் செலுத்திவந்த தலைநகரிலேயே, அவர்கள் கண்முன்னே, அவர்களுக்கு நீதி புகட்டிய செய்கை, அதன் மூல காரணமாயிருந்த நம் அனைவருக்கும் தண்டனையாய் மாறிய இயற்கையன்னையின் செய்கை!

“அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்றே கொல்லும்!” என்ற கூற்றின் மற்றுமோர் சாட்சி!

இவையெல்லாவற்றையும் விட நாம் காணும் மனித நேயம், மக்கள் மாண்பு நிச்சயம் இயற்கையன்னையைக் குளிர்விக்கும்! மொழி, இனம், தகுதி, பகுதி பாகுபாடின்றி மாநிலமெங்கிருந்தும் குவியும் ஆதரவுக்கரங்கள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் இவையனைத்தும் நமது மக்களின் மனித நேயத்தையும் மாண்பையுமே பதிவு செய்கிறது!

இதுதான் இயற்கைத்தாயின் எல்லை

இன்னும்கூட சில பல கூத்தாடிகளும், தகுதியற்ற அரசியல் தலைவர்கள் பலரும் வேடமிட்டு ,பேதம் விதைத்து, ஆட்சி பீடத்திற்காக (பெற / தக்க வைக்க) உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்; மக்களுக்கு இயற்கையன்னை வழங்கிச்சென்றிருக்கும் சான்றிதழ்பற்றி உணராமல்!

சென்னையின் தவிப்பு நிச்சயம் கடினமானதே! ஆனால் மக்கள் பெரும்பான்மையானோர் காட்டும் மனோதைரியம் நிச்சயம் போற்றுதற்குரியது! இது தமிழகத்தின், ஏன்? முழு பாரதத்திற்கும், ஒரு பாடம்!. சில பல வியாபாரிகளும், தொழிலதிபர்களும் ஆட்சி செலுத்தும் சில பல நிர்வாகிகளோடு (அரசியல் தலைவர்கள்) கைகோர்த்து மாபாதகங்கள் புரிந்தால், அதைப்பற்றித் தெரியாமல் மக்கள் வேண்டுமானால் ஏமாறலாம்! ஆனால் … இயற்கை?

இனி மக்களும் ஏமாறமாட்டார்கள்!!

ஏமாற்றுவது கூட குற்றமில்லை! ஆனால் நிச்சயம் ஏமாறுவது குற்றமே!!

About The Author

Related posts

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *