Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

கொதிப்பில் தமிழகம்! அலட்சியத்தில் அரசாங்கங்கள்!

ஜல்லிக்கட்டு

Story Highlights

  • விழிக்காவிடில் பழி நிச்சயம்!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

 

Thanks

 

கொதிப்பில் தமிழகம்! அலட்சியத்தில் அரசாங்கங்கள்!

என்ன நடக்கின்றது இந்தத் தாய்த்தமிழ்நாட்டில்? எம் குழந்தைகள் வீதிகளில் எம் குல வழக்கம் காக்க போராட்டங்களில்! ஆனால் ஆட்சியாளர்கள் அடக்குமுறைக்காரர்களாய் சாலைகளில்!

எங்கிருந்து தொடங்கிற்று? எப்படி தொடங்கிற்று? எவரால் தொடர்கிறது? புரிந்து கொள்ள விரும்பாத அரசியல் வி…….! (தணிக்கை செய்யப்பட்டது) புரிந்து கொள்ள முடியாத மக்கள்! இவற்றை வெற்றுக்கூச்சலாய், பொ……மாய் (தணிக்கை செய்யப்பட்டது) பொய்யுரைப்பது கண்டிக்கத்தக்கது!

இது ஒரு அடிப்படை கோளாறின் வினைப்பயன்!

ஆம்! இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். ஒரு இனத்தை அதுவும் உலகின் மூத்த குடியை ஒரு அரை நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அரசியலமைப்பும் அரசுகளும் தொடர்ந்து அடிமைப்படுத்த முயல்வதா?

அடங்கிப் போவதனால், அடங்கிப் போவரெல்லாம் அடிமைகள், கோழைகள் என்றாகிவிடுமா? சட்டம் என்ன குருடா? அதற்கு வக்கீல்கள் வாதத்தினால் ஒளியூட்டி விளக்கேற்ற?

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

சட்டம் அதை மதிப்பவரை மட்டுமே மிதிப்பதற்கா, என்ன? சட்டமும் நீதியும் நேர்மையாக, அனைவர்க்கும் சமமாகவும், பொதுவாகவும் எங்கு உள்ளதோ, அங்கே நீதி வாழ்வதாய் ஆகும்! இங்கு, இப்போது காட்டப்பெறும் பாரபட்சம் நீதியையும், நீதியின் காவலர்களின் நேர்மையை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது!

ஒரு சமுதாயத்தின் கட்டுப்பாடு என்பது அதன் கலாச்சாரம் சார்ந்தது. அதை சட்டம் என்ற ஒன்று துண்டாட முடியுமென்றால் அது அந்த சமுதாயத்தின் குற்றமல்ல! அந்தச் சட்டம் மற்றும் அதைக் கொண்டு வந்தவர்களின் குற்றம்! அதற்கான தண்டனையை அவர்கள் அடைந்தே தீர வேண்டும்!

இந்திய இறையாண்மையின் சிறப்பு, பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்டது! அதை அன்னியரோ, அன்னியரின் அடிமைகளோ, அன்னியருக்கு விலை போன வே… (தணிக்கை செய்யப்பட்டது), அரசியல்வாதிகள் என்ற பெயரில் உலவும் சில/பல கேடிகளோ நிர்ணயம் செய்யக்கூடாது!

நாடு ஒரு கண்! இனம் ஒரு கண்!

நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற நிலை வந்ததே இழி நிலைதான்! இதற்கு காரணம் யார்? நிச்சயம் நாம் தான்! நாம் யார்? மக்கள்! தகுதியில்லாத, ஒழுக்கமில்லாத, நேர்மையற்ற நபர்களைத் தேர்ந்தெடுத்ததின் பயன்! இலவசப்பிச்சைகளுக்கு, எச்சை இலை பொறுக்கியதின் பயன்! இன்று நம்மை பொறு…. (தணிக்கை செய்யப்பட்டது) என்று சொல்லக்கேட்கும் இழி நிலை! நாடும், இனமும் ஒன்றே! இதில் ஒன்றை விட்டு ஒன்றைப் பெறுவதில் இழப்பே!

புரட்சி

இந்த ஒரு வார்த்தை, எப்போதுமே ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத வார்த்தை! அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்காத வார்த்தை! அதற்கென்ன செய்ய? எங்கே அடக்குமுறையும், அராஜகமும், அநீதியும் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் மக்களின் வடிகாலாய், களையெடுப்பாய் புரட்சி பிறக்கும்! (கவனிக்க: இங்கே வெடிக்காது! ஏனெனில் நாங்கள் பாருக்கே மூத்த குலத்தினர்! எங்கள் பாரம்பரியம் அப்படிப்பட்டது! தந்தைக்கே போதித்த மகன் குலத்தோர்!) இங்கே, இன்று, இப்போது எம் குழந்தைகள் இந்த தேசத்திற்கே பாடம் சொல்லித்தந்து கொண்டிருக்கின்றனர்!

இறுதியுரை

அன்புமிக்க அரசாங்கத்தின் அதிகாரிகளே! காவல்துறை நண்பர்களே, ஊடக நண்பர்களே, செய்தி நிறுவன நண்பர்களே இங்கே வீதியில் நின்று சத்தமிட்டுக் கொண்டிருப்பது போராட்டக்காரர்கள் அல்லர்! அவர்கள் நமது குழந்தைகள்! நமது கலாச்சாரத்தைக் காக்க வேண்டுமென்றும், அன்னியரெவருக்கும் அதை விட்டுத்தரமாட்டோம் என்றும், நாம், நமது வாழ்நாளில் செய்யாத, செய்யத்தவறிய ஒரு விசயத்தை நமக்கு விமோச்சனமாய் செய்து தரும் தெய்வங்கள்! அவர்களைப் போற்றாவிடினும் காக்கும் கடமை நமக்குள்ளது!

 

இனியும் விழிக்காவிடில் வரலாற்றில் பழிக்கப்படுவோம்!

 

 

தமிழனென்று சொல்லடா!                                                           தலை நிமிர்ந்து நில்லடா!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *